மேலும் ஒரே பாலின திருமண விவகாரத்தில் நாடாளுமன்றத்தால் ஒரு இறுதி சட்டம் இயற்றப்படும் வரை, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்,சந்திரசூட், நீதிபதிகள் ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோரும், அதேபோன்று இந்த வழக்கை முன்னதாக விசாரித்தபோது இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பதிலாக, தற்போது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 10ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.