இதுதொடர்பாக மூத்த தலைவர் ஷிபுசோரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,’ நான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதன்மை உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஜார்கண்ட் மக்களின் பிரச்சனைகளில் எனது போராட்டம் தொடரும். ஜே.எம்.எம் கட்சியின் தற்போதைய செயல்பாடு மற்றும் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். சம்பாய் சோரன் விரைவில் பா.ஜவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.