மதுரை: முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோயில் யானையை தொடர்ந்து பராமரிக்கவும் கண்காணிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சமயபுரம் கோயில் யானையை வாரம் ஒருமுறை கால்நடை மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும். சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமென்ட் என்பவர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரைக்கிளை முடித்து வைத்தது.