லக்னோ: உபியில் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ தாராசிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உபி சட்டபேரவை சபாநாயகர் சதீஷ் மகானா, சட்டபேரவை முதன்மை செயலாளர் பிரதீப் துபே ஆகியோரிடம் நேற்று ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். உபி சட்ட பேரவை தேர்தலுக்கு முன் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் சவுகான் இடம்பெற்றிருந்தார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாடி கட்சியில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாடி எம்எல்ஏ திடீர் ராஜினாமா
previous post