சாலிகிராமத்தில் அறை எடுத்து கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டில் அறை எடுத்து விலை உயர்ந்த கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அபார்ட்மெண்ட்டில் போதைப்பொருள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அறை ஒன்றில் மதுபோதையில் சந்தேகத்துடன் இருந்த 2 பேரை சோதித்தபோது விலை உயர்ந்த கஞ்சா இருப்பது தெரிய வந்தது.இருவரும் இருந்த அறையில் விலை உயர்ந்த 35 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.45,000 மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்த சாலிகிராமம் அபினேஷ், சைதாப்பேட்டை கௌரிசங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!!

விபத்துகளை தடுக்கும் வகையில் தேனி போடேந்திரபுரம் விலக்கில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!