சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.5.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளியை ஒட்டி பரிசுப் பொருட்கள் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.5.83 லட்சத்தை கைப்பற்றி, அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.