சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலை. ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலை. வளாகத்தின் உள்ளே முகாம் அலுவலகத்தில் துணைவேந்தர் குடியிருந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் துணைவேந்தர் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்து பல்கலை. வளாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.