சேலம்: தலைமறைவாக உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய பல்கலை. ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதன் மீதான ஊழல் புகாரில் பதிவாளர் தங்கவேலு, இணை பேராசிரியர் சதீஷ் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த 26-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் பதிவாளர் தங்கவேலு மற்றும் சதீஷ் தலைமறைவாக உள்ளனர்.