சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஓராண்டாக ஆவணங்களை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. துணைவேந்தரின் நடவடிக்கையை கண்டித்து ஆவணங்களுடன் உயர்கல்வித் துறைக்கு ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.