சேலம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பேராசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பதிவாளருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட துணைவேந்தருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்கலைக்கழக விதிகளை மீறி துணைவேந்தர் ஜெகநாதன் செயல்படுவதாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டி வருகிறது.