சேலம் அருகே ஜல்லிக்கட்டு மாட்டின் வாயில் உயிரோடு உள்ள கோழியை திணித்து சாப்பிட வைத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு

சேலம்: ஜல்லிக்கட்டு மாட்டின் வாயில் உயிரோடு உள்ள கோழியை திணித்து சாப்பிட வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சேலம் சின்னப்பம்பட்டி அருகே அக்கறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் காளை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கு காரணமான ரகு மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு