சேலம்: ஜல்லிக்கட்டு மாட்டின் வாயில் உயிரோடு உள்ள கோழியை திணித்து சாப்பிட வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சேலம் சின்னப்பம்பட்டி அருகே அக்கறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் காளை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கு காரணமான ரகு மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.