சென்னை: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கோயிலை சுற்றி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சீரற்ற வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.