இதை தொடர்ந்து, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, டிசம்பர் 17ம் தேதி சேலம் இளைஞர் அணி மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பெருந்திரளாக இளைஞர்கள் கலந்துகொள்வது, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் சிறப்பாக செயல்படும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இருசக்கர வாகன பேரணிக்கு வரும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருவள்ளூர் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மோகன் பாபு, முரளிதரன், சங்கர், யுவராஜ், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீஞ்சூர் இளைஞர் அணி அமைப்பாளர் க.மில்லர் நன்றி கூறினார்.