சேலம் கலெக்டர் அலுவலக மாடியிலிருந்து குதித்த வாலிபர்

சேலம்: சேலம் அருகேயுள்ள இரும்பாலை சித்தூரை சேர்ந்தவர் செல்வகணபதி (24).கூலித்தொழிலாளி. இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகார் அளிக்க மனைவி சென்றார். இதையடுத்து செல்வகணபதியை வரவழைத்து அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அந்நேரத்தில் செல்வகணபதியின் செல்போனுக்கு அவரது சகோதரி அழைத்து பேசினார். ‘‘உன்னால் அப்பாவை போலீசார் அழைத்துச் சென்று விட்டனர்’ என கூறி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகணபதி, 18 அடி உயரமுள்ள முதல்மாடியில் இருந்து கீழே குதித்தார். கொய்யா மரத்தில் விழுந்த அவர் பெரிய அளவில் காயமின்றி உயிர் தப்பினார். அவரை போலீசார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது