இதுதொடர்பான புகாரின்படி சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செயலாளர் மோகன், தலைவராக இருந்த சத்யபானு, உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கூட்டுறவு துணை பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்க செயலாட்சியர் கவிதா விசாரணை நடத்தினார். இதில் உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோர் ரூ.1.08 கோடி கையாடல் செய்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். செயலாளர் மோகன் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.