சேலம்: சேலத்தில் பட்டப்பகலில் ஜவுளிக் கடை உரிமையாளரை கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக் கடைக்குள் புகுந்து உரிமையாளர் ஈஸ்வரனை அரிவாளால் வெட்டிவிட்டு தங்கதுரை என்பவர் தப்பி ஓடினார். படுகாயமடைந்த ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய தங்கதுரையை போலீஸ் தேடி வருகின்றனர்.