சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து இறுதி கருத்துக்கேட்புக்கு அரசின் கூடுதல் தலைமைச்செயலர் அழைப்பு விடுத்துள்ளார். அரசு சார்பில் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் வழக்கு தொடரும் முன்பு இரு தரப்பினரிடனும் கருத்து கேட்கப்படுகிறது. ஜூலை 16-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் ஆஜராகி கருத்துகளை முன்வைக்க கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.