சேலம்: தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி பல்கலை. பதிவாளர் தங்கவேலுவை துணைவேந்தர் ஜெகநாதன் ஓய்வுபெற அனுமதித்தார். ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு, நடவடிக்கைக்கு ஆளாகாமலேயே இன்று ஓய்வு பெற்றார். பெரியார் பல்கலைக்கழகத்தில் பொருட்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் பதிவாளர் தங்கவேலு ஊழல் செய்தது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்கவேலு மீது புகார் உறுதியானது. தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.