சேலம் மாரியம்மன் தேரோட்டம்: அடிப்படை வசதிசெய்து தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி விழா தேரோட்ட நிகழ்வுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி செய்துதர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேட்டூர் திருத்தொண்டர்கள் அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆடி மாதம் நடைபெறும் ஆடிப் பெருவிழா தேரோட்டத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், தேரோட்ட விழா சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்