சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான விவாத்தில் வேளச்சேரி எம்எல்ஏ (காங்கிரஸ்) அசன் மவுலானா பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் மனதை உலுக்குகிறது. டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்கப்படுகிறது.
அதனால், நம் நாட்டு வெப்பநிலைக்கு ஏற்ற பானமான கள் விற்பனையை தொடங்க வேண்டும். ஆவின் பால் விற்பனைக்கு தனித்துறை அமைக்கப்பட்டது போல், கள் விற்பனைக்கும் தனியாக ஒரு துறை அமைக்க வேண்டும். மதுவிலக்கு அமல்படுத்துவது எளிதான காரியம் கிடையாது. தேசிய அளவில்தான் மதுவிலக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.