2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 ஆம் தேதி முதல் 9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மே வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியான இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி