இதை அடுத்து அந்த பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் களமிறக்கப்பட்டனர். சைதாப்பேட்டை பேருந்து நிலைய பணிமனை அருகே தேங்கிய தண்ணீர் மின் மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்டது. இதே போல தேனாம்பேட்டை பகுதிகளிலும் சாலைகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து அகற்றினர்.