சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் மின் மோட்டார் மூலம் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்..!!

சென்னை: சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீர் மின் மோட்டார்கள் மூலமாக உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இதை அடுத்து அந்த பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் களமிறக்கப்பட்டனர். சைதாப்பேட்டை பேருந்து நிலைய பணிமனை அருகே தேங்கிய தண்ணீர் மின் மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்டது. இதே போல தேனாம்பேட்டை பகுதிகளிலும் சாலைகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து அகற்றினர்.

Related posts

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!

செப்டம்பர் 12-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: ஒடிசா அருகே இன்றிரவு கரை கடக்க வாய்ப்பு