சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் கண்ணன் என்பவர் வீட்டில் 44 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் கண்ணன். வீட்டு பணிப்பெண்கள் 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் கண்ணன் புகார் அளித்துள்ளார். கண்ணன் அளித்த புகாரை அடுத்து சென்னை சைதாப்பேட்டை போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.