இமாச்சலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து கார் விபத்து: சைதை துரைசாமியின் மகனை காணவில்லை

சிம்லா: ஹிமாச்சல் மாநிலம் கஷங் நாலா பகுதியில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. இமாச்சலப்பிரதேசத்தில் சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. சட்லஜ் நதியில் கார் விழுந்த நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை. இமாச்சலப்பிரதேசத்தின் காசங் நாலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

இமாச்சலப்பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் கார் விபத்தில் சிக்கினார். சைதை துரைசாமியின் மகன் வெற்றி உள்பட 3 பேர் பயணம் செய்த கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்தது. வெற்றியுடன் காரில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். கார் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சைதை துரைசாமி மகன் வெற்றியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை