சென்னை: பக்ரீத் பண்டிகையின்போது மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஆடு, மாடுகளை சட்டவிரோதமாக அனைத்து பகுதிகளிலும் வெட்டி பலியிட தடை விதிக்கக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு, மாடுகளை பலியிடுவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.