சச்சின் சாதனையை தகர்க்க கோஹ்லிக்கு வாய்ப்பு

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி இரண்டு முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது. இதற்குக் காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனினும் இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விராட் கோஹ்லி டக் அவுட் ஆனார்.

இதன் மூலம் உலககோப்பை வரலாற்றில் அவர் பெற்ற முதல் டக் அவுட் இது ஆகும். இந்த நிலையில் கடந்த போட்டியில் ரன் அடிக்காமல் இருந்ததற்கு சேர்த்து இன்றைய ஆட்டத்தில் விராட் கோஹ்லி இரண்டு முக்கிய சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோஹ்லி சதம் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை சமன் செய்து விடுவார். சச்சின் 49 சதங்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோஹ்லி தற்போது 48 சதங்களை அடித்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிராக கோஹ்லி சிறப்பாக ஆடி வருகிறார்.

ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக கோஹ்லி 10 சதங்களை அடித்திருக்கிறார். மேலும் 49வது சதத்தை இன்று கோஹ்லி தொட்டால் அதிவேகமாக இந்த மைல்களை தொட்ட வீரர் என்ற சாதனையும் கோஹ்லிக்கு சேரும். அதேபோன்று கோஹ்லி இன்றைய ஆட்டத்தில் 34 ரன்கள் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் ஆயிரம் ரன்களை தொட்டுவிடுவார். இந்த ஆண்டு கோஹ்லி மேலும் 34 ரன்கள் சேர்த்தால் 8 முறை ஆயிரம் ரன்கள் தொட்ட வீரர் என்ற பெருமையை பெற்று சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி