இந்நிலையில் தந்திரி கண்டரர் ராஜீவரர் இந்தப் பொறுப்பிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இதனால் இவருக்குப் பதிலாக அவரது மகன் கண்டரர் பிரம்மதத்தன் (30) புதிய தந்திரியாக நியமிக்கப்பட உள்ளார். வரும் ஆவணி மாதம் ஒன்றாம் தேதி முதல் இவர் சபரிமலை கோயில் தந்திரி பொறுப்பை ஏற்பார். சட்டத்தில் முதுகலை படித்துள்ள இவர் ஒரு சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் இவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து பூஜைகளில் ஈடுபடத் தொடங்கினார்.