இந்த காட்சிகளை காண்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதி அன்று சபரிமலையில் கூடுவர். மகர ஜோதி நடைபெறக்கூடிய பொன்னம்பல மேடு என்பது அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் யாரும் நுழையக்கூடாது என்ற தடையும் உள்ளது. அங்கு அதிக அளவில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதனாலும் அந்த பகுதி பாதுகாக்கப்பட வனப்பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொன்னம்பல மேடு இருக்க கூடிய மலை மீது அமர்ந்து பூஜை செய்யக்கூடிய காட்சிகளும், பூஜை நடைபெறும் போது அதன் பின்னணியில் இருந்து இடத்தை பற்றியும், எதிர்திசையில் இருக்கக்கூடிய சன்னிதானத்தை குறித்து விளக்கமும் ஒருவர் அளித்துக்கொண்டிருக்கும் காட்சியும். சமூக வலைத்தளங்களில் பரவி ஐயப்ப பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேரள இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார்.