சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர் ஜெயராம் தரிசனம்: நாளை நடை அடைப்பு

திருவனந்தபுரம்: சித்திரை விஷு பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை சாத்தப்படுகிறது. சித்திரை விஷு சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 11ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (12ம் தேதி) முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. கடந்த 15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே நேற்று பிரபல மலையாள நடிகர் ஜெயராம், அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான பார்வதி ஆகியோர் தரிசனம் செய்தனர். நாளையுடன் (19ம் தேதி) சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நிறைவடைகின்றன. நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் வைகாசி மாத பூஜைகளுக்காக மே 14ம் தேதி நடை திறக்கப்படும்.

Related posts

புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்: நாளை தீர்த்தவாரி