இதனைத் தொடர்ந்து தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவள் குறும்படக் குழுவிற்கு விருதினை வழங்கி பாராட்டினார். ‘‘இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம். ஒரு குறும்படத்துக்காக அரசு விருதை வென்றுள்ளோம். நான் பெருமைப்படுகிறேன். இந்த அசாத்தியமான சாதனைக்கு எனது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உதவினார்கள்’’ என்று காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறினார். இந்நிலையில் கல்லூரிகளுக்கு இடையேயான ஜி 20 குறும்படப் போட்டியில் 2ம் பரிசு வென்ற எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ‘அவள்’ குறும்பட குழுவினரை கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.