நாகர்கோவில் : மகன் படிக்கும் அரசு பள்ளி ஆண்டு விழாவில் மனைவியுடன் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் பங்கேற்றார். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் மகன் நிஸ்ரிக், கோட்டாரில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறான். இந்த பள்ளி ஆண்டு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், மனைவியுடன் வந்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது : பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். குற்றவாளிகளாக தற்போது இளம் வயதினர் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்கும் போது பெற்றோரிடம் முறையான அரவணைப்பு இல்லை என்பது தெரிகிறது. கடுமையான பணி சுமை இருந்தாலும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.