தற்போதைய தகவல்களின்படி, சுமார் 85 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தின் பிடியில் இருந்து இந்தியா திரும்பி வந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, உக்ரைன் – ரஷ்ய போர் மோதலில் சில இந்தியர்கள் இறந்துள்ளனர். அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இன்னும் 20 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள அனைத்து இந்தியர்களையும் ரஷ்ய ராணுவத்திடம் இருந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என்று கூறினார். முன்னதாக கிடைத்த தகவலின்படி, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.