மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக எதிர்த்து வந்தவர் அலெக்சி நவல்னி(47).மோசடி வழக்கில் அலெக்சிக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உயர்ந்தபட்ச பாதுகாப்பு உடைய ஆர்க்டிக் சிறையில் இருந்து வந்த அலெக்சி நவல்னி திடீரென உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. நவல்னி சிறையில் வழக்கம் போல நேற்று வாக்கிங் சென்று வந்தார். அப்போது திடீரென அவர் சுயநினைவை இழந்து மரணம் அடைந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.