ஸ்டாக்ஹோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று ஸ்வீடன் புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக அதிபர் ஜெலன்ஸ்கி ஸ்வீடன் சென்றுள்ளார். அவர் அங்கு அந்நாட்டு அதிகாரிகளை சந்திக்கிறார். மேலும் மன்னர் 16ம் கார்ல் குஸ்டாபையும் சந்திக்க இருக்கிறார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.