ஜபல்பூர்: மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு ஜபல்பூர் – நிஜாமுதீன் பயணிகள் விரைவு ரயிலின் ஏசி பெட்டியின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் அருவி போல் வேகமாக கொட்டுகிறது. இதுகுறித்து பயணிகள் புகார் அளித்தனர். இதனிடையே ஜபல்பூர் – நிஜாமுதீன் விரைவு ரயில் ஹஸ்ரத் நிஜாமுதீனை வந்தடைந்தது. அங்கு தண்ணீர் கசிந்த பெட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இதற்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பான காணொலி காட்சிகளை காங்கிரஸ் தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, பாஜ அரசை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் தன் எக்ஸ் பதிவில், “பாஜ ஆட்சியில் ரயிலில் நீர் வீழ்ச்சி வசதி செய்து தரப்பட்டுள்ளது” என்று நையாண்டியாக தெரிவித்துள்ளது.