அப்போது அந்த கும்பல், இரு போலீஸ் கான்ஸ்டபிள்களையும் கொடூரமாக தாக்கி, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசினர். இந்த சம்பவத்தில், இரண்டு கான்ஸ்டபிள்களும் பலியாகினர். இந்த நிலையில் 2 கான்ஸ்டபிள்களை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற பீகார் மாநிலம் பாட்னா அடுத்த புல்வாரி ஷெரீப்பை சேர்ந்த முகமது ஜாஹித் என்பவனை நொய்டா எஸ்டிஎப் மற்றும் காஜிபூர் காவல்துறையின் கூட்டு தனிப்படை தேடி வந்தது.
இந்நிலையில் காஜிபூர் அடுத்த தில்தர்நகர் பகுதியில் ரவுடி முகமது ஜாஹித் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அவனை சுற்றிவளைத்த போது, அவன் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். போலீசார் பதிலடி துப்பாக்கி சூடு நடத்தியதில், முகமது ஜாஹித் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கில் 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.