திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து குண்டூருக்கு சென்ற ரயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கடப்பா மாவட்டம், எர்ரகுடிபாடு ரயில் நிலையம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, 20க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்1 பெட்டி முதல் எஸ்6 பெட்டி வரை ஏறினர். பின்னர், பயணிகளை மிரட்டி நகை மற்றும் பணம் கொள்ளையடித்துவிட்டு கீழே குதித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளிடம் சுமார் 60 சவரனுக்கு மேல் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.