ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

செங்கல்பட்டு: ஓடும் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் செய்யார் பகுதியில் நடைபெற்ற தனது தோழி திருமணத்தில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது, பேருத்தில் தனது இருக்கை அருகே அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த சதீஷ் (28) கைது செய்தனர்.

Related posts

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி; காங்கிரஸ் ரூ.2,000 அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவிப்பு..!!

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!