கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் உள்ள ஷூ கம்பெனிக்கு ஆட்கள் எடுப்பதாக பரவிய வதந்தியால் வேலைக்கு விண்ணப்பிக்க திரண்டு வந்த 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிந்ததும் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.