புதுடெல்லி: இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்ரா எம்-2 ஏவுகணை, திட- உந்துதல் ஏவுகணையாகும். இது பலவகையான இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் உடையது. பல்வேறு டி.ஆர்.டி.ஓ.(பாதுகாப்புதுறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரை பகுதியில் எஸ்யு-30 ரக போர் விமானத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணிக்கு இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
ருத்ரா எம்-2 ஏவுகணை சோதனை வெற்றி பாதுகாப்பு படைக்கு மிக பெரிய வலு சேர்க்கும் என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ருத்ரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததற்கு டிஆர்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.