ஆனால், டிரைவர் சங்கர் ஆர்டிஓ கார் மீது லாரியை மோதி அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த வழக்கில் லாரி டிரைவர் சங்கர் மற்றும் லாரி உரிமையாளரான அதிமுக நிர்வாகி சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், திருச்சி சிறையில் இருக்கும் சுந்தரம், டிரைவர் சங்கர் ஆகிய இருவரும் புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.