ஆர்டிஓவை கொல்ல முயற்சி அதிமுக நிர்வாகி மீது குண்டாஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த கிளிக்குடி பகுதியில் இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி, அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கிளிக்குடி ஊராட்சி பகுதியில் கடந்த மாதம் 13ம்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது ஆற்று மணல் ஏற்றி வந்த ஒரு டாடா 407 லாரியை ஆர்டிஓ நிறுத்த முயன்றார்.

ஆனால், டிரைவர் சங்கர் ஆர்டிஓ கார் மீது லாரியை மோதி அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த வழக்கில் லாரி டிரைவர் சங்கர் மற்றும் லாரி உரிமையாளரான அதிமுக நிர்வாகி சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், திருச்சி சிறையில் இருக்கும் சுந்தரம், டிரைவர் சங்கர் ஆகிய இருவரும் புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Related posts

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு

வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி செய்ததுடன் காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை: எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு