திருமயம்: புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா. இவர், தனது அரசு காரில் புதுக்கோட்டையிலிருந்து திருமயம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் காமராஜ் ஓட்டி சென்றார். திருமயம் டோல்கேட் நகரத்துப்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக சென்ற பஸ்சை முந்தி செல்ல பைக் முயன்றபோது, எதிரே வந்த ஆர்டிஓ கார், எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது பைசல் (20), முகமது பயாஸ் (28) ஆகியோர் பலியாகினர்.