ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு ஐகோர்ட் விதிகளின்படி கூடுதல் விவரம் தந்தால் அனுமதி தருவது பற்றி பரிசீலனை: காவல்துறை

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு ஐகோர்ட் விதிகளின்படி கூடுதல் விவரம் தந்தால் அனுமதி தருவது பற்றி பரிசீலனை செய்யப்படும் காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயதசமியை ஒட்டி அக்.6ல் மாநிலம் முழுவதும் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். மனு அளித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஐகோர்ட் வகுத்த விதிமுறைக்குட்பட்டு அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளின் படி விவரங்கள் வழங்கப்படவில்லை என காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது!

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்!

பிரதமர் மோடியை இன்று காலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!