சென்னை: இலங்கை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் சம்பந்தன் குரல் கொடுத்தவர். இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக நீண்டகாலம் போராடி வந்தவர் சம்பந்தன். இரா.சம்பந்தனின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதுஎனவும் கூறினார்.