டெல்லி: தமிழ்நாட்டுக்கு உடனடியாக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலிவுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணி மேற்கொள்ள உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். முதலமைச்சர் கோரிய ரூ.5,000 கோடி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.