கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.