ஒரு கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை கொடுத்தால் ரூ.90 லட்சம் கமிஷன் தருவதாகக் கூறி மோசடி; போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 3 பேரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.90 லட்சத்தை கொள்ளையடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை கொடுத்தால் ரூ.90 லட்சம் கமிஷன் தருவதாகக் கூறி மோசடி அரங்கேறியுள்ளது. ஷாஜகான் என்பவரிடம் ஒரு கோடிக்கு, 2000 ரூபாய் நோட்டுகள் தந்தால் கமிஷன் தருகிறேன் என்று சக்திவேல் கூறியுள்ளார். ரூ.90 லட்சம் கமிஷன் என்று ஷாஜகான் நண்பர்கள் குணசேகரன், ராஜசேகரன் தெரிவித்துள்ளனர்.

ரூ.90 லட்சம் கமிஷன் பெற ஒப்புக்கொண்ட சக்திவேல், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை எடுத்துச் சென்றுள்ளார். கொண்டம்மநாயக்கனூரில் ரூ.90 லட்சம் பணத்துடன் வந்த குணசேகர், ராஜசேகர், ஷாஜகான் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கட்டிவைத்துவிட்டு ரூ.90 லட்சம் பணம், காருடன் சக்திவேல் தப்பியுள்ளார். பணத்தை மாற்றி தருவதாக கூறி மிரட்டி திருடியவர்களுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

Related posts

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை