ஈரோடு: ஈரோடு மரப்பாலம் அருகே அதிகாலையில் வாகன சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படையினர், தேனியில் இருந்து கருங்கல்பாளையம் சந்தையில் மாடு வாங்க வந்த கோபிநாத் என்பவரிடம் இருந்த ரூ.1,05,000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.