இந்நிலையில், இந்த விவகாரத்தில் 9 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர் கேசவ மூர்த்தி, கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன சாமி உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், இந்த விஷயம் எனக்கு தெரிய வந்த உடனேயே, இதுகுறித்து முறையான விசாரணை நடத்துமாறு காவல் துறை டிஜிபிக்கு உத்தரவிட்டேன்.
இதையடுத்து மூத்த காவல் துறை அதிகாரிகள் சிறையை பார்வையிட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தர்ஷனுக்கு சில சலுகைகள் வழங்கி கவனித்துக்கொண்டது தெரியவந்தது. சிறை வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.