சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். அநாகரிகமான செயலை தட்டிக் கேட்ட மாணவியின் பெரியம்மா மீது ரவுடி தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவி தரப்பில் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து ரவுடி தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். காவல் நிலைய குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்ததால் கை உடைந்து ரவுடிக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.